சஞ்சீவையா பூங்கா
சஞ்சீவையா பூங்கா இந்தியாவின் ஐதராபாத்தின் மையத்தில் உள்ள ஒரு பொது திறந்தவெளிப் பூங்காவாகும். உசேன் சாகர் ஏரியின் கரையோரத்தில் 97 ஏக்கரில் கட்டப்பட்ட இந்த பூங்காவிற்கு ஆந்திராவின் முன்னாள் முதல்வரான தாமோதரம் சஞ்சீவய்யா பெயரிடப்பட்டது. இந்த பூங்காவை ஐதராபாத்து பெருநகர மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கிறது. கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய விருதுகளுக்கான 2010 தேசிய அறக்கட்டளை விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்தப் பூங்கா சிறந்த திறந்தவெளி இயற்கைப் பூங்கா விருதை வென்றது. இந்தப் பூங்காவில் இரண்டாவது மிக உயரமான இந்தியாவின் தேசியக் கொடியும் உள்ளது.
Read article